அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்.. 2019-க்குள் 1 கோடி வீடுகள் கட்டப்படும்… பட்ஜெட்டில் அறிவிப்பு
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2019ம் ஆண்டிற்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
டெல்லி: அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கச்சா வீடுகளில் குடியிருப்போருக்காக 2019ம் ஆண்டிற்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
2017-18ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 2019ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 2019ம் ஆண்டிற்குள் 50,000 கிராம பஞ்சாயத்துக்களில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும் என்றும் பட்ஜெட்லில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வீட்டு வசதி கடனுக்காக 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. குழாய் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.