மணிப்பூரில் இரட்டை குண்டுவெடிப்பு: ஒருவர் பலி- 6 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியானார். 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தின் தெளபால் மாவட்டத்தில் பல்லெல் லம்கை என்ற இடத்தில் நேற்று இரவு 2 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தீவிரவாத இயக்கத்தினர் இரவு 10.40 மணி அளவில் குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர்.

இதில் கட்டுமான பணிக்காக வந்து கட்டிடம் ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் பலியானார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவருமே கூலித் தொழிலாளர்களே. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்புகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications