ஜம்மு காஷ்மீரில் பாக். தொடர் தாக்குதல்: 10 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறினர்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து கண்மூடித்தனமாக நடத்தி வரும் தாக்குதல்களால் எல்லையோர கிராமங்கள் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர எல்லையில் இந்திய நிலைகள் மீது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான். கடந்த சில நாட்களாக எல்லையோர கிராமங்களையும் இலக்கு வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு இந்திய ராணுவம் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் பாகிஸ்தான் தொடர் தாக்குதல்களால் கதுவா மற்றும் சம்பா மாவட்ட எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கிராமங்களை விட்டு அகதிளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனிடையே எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் டி.கே. பதக் இன்று எல்லையோர நிலைமைகளை நேரில் ஆய்வு செய்தார்.












Click it and Unblock the Notifications