உத்தரகாண்ட் கனமழை- நிலச்சரிவில் 10 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரக்காண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 10 உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரக்காண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

10 dead after landslide in Uttarakhand

அம்மாநிலத்தில் சக்ரத்தாவில் உள்ள தியோனி பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை வெள்ளத்தில் சிக்கியும், ஹரித்துவார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியும் சார்தாம் யாத்திரை சென்ற பல்லாயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+