ஜன.1-ம் தேதி முதல் மெட்ரோ ரெயில் நிலையங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அறிமுகம்
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டெல்லி: டெல்லியில் உள்ள 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி ரூ500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டிசம்பர் 31-ந் தேதி வரை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் அந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் மார்ச் மாதம் வரை கொடுத்து மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை மாற வேண்டும் என மத்திய அரசு ஊக்குவிதித்து வருகிறது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து, ரொக்க பணமில்லா மின்னணு பரிமாற்ற முறையை அனைத்து தரப்பினரும் பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜனவரி 1-ம் தேதி முதல் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறுகிறது. டெல்லியில் உள்ள ரோகினி கிழக்கு, ரோகினி மேற்கு ரயில் நிலையங்கள், எம்ஜி ரயில் நிலையம், மயூர் விகாஸ், நிர்மன் விகர், திலக் நகர், ஜானக்புரி மேற்கு, நொய்டா செக்டார் - 15, நேரு பிளேஸ், கைலாஸ் காலனி ரயில் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications