விதிமீறல்கள்.. விடிந்தும் விடியாததுமாய் ஆயிரம் டிரைவர்களிடம் அபராதம் வசூலித்த பெங்களூர் போலீஸ்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூர் நகரின் பல்வேறு இடங்களில் அதிரடி வாகன தணிக்கை நடத்திய டிராபிக் போலீசார் இன்று காலை நேரத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் அபராதம் வசூலித்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் கூப்பிடும் இடத்துக்கு போகாதது, சிக்னல்களை மதிக்காதது, மீட்டரில் சூடு வைப்பது, அதிக கட்டணம் கேட்பது போன்ற அராஜகங்களில் ஈடுபடும் ஆட்டோ டிரைவர்களை மடக்கிப்பிடிக்க, பெங்களூர் டிராபிக் போலீசார் இன்று காலை முதல் தீவிர வாகன தணிக்கைகளில் ஈடுபட்டனர்.
காலை முதல் மதியத்திற்குள், மொத்தம், 1194 ஆட்டோ டிரைவர்கள் போலீசாரிடம் சிக்கினர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தவறிழைத்திருந்தால், அந்த ஆட்டோ டிரைவர்களுக்கு கடுமையான எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications