For Daily Alerts
Just In
ஒடிசாவின் ‘காலிங்கா பாலியாத்ரா’ திருவிழாவில் சிலிண்டர் வெடித்து விபத்து - 12 பேர் காயம்
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடைபெற்ற காலிங்கா பாலியாத்ரா திருவிழாவில், எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்தனர்.
ஓடிசாவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று"காலிங்கா பாலியாத்ரா". பாரதீப் பகுதியில் நடைபெற்ற இந்த திருவிழாவின் போது, பலூனை நிரப்புவதற்காக வியாபாரி ஒருவர் கொண்டு வந்த சிலிண்டர் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. விபத்தில் காயமடைந்த 12 பேர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் நான்கு பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூடுதல் கண்காணிப்பாளர் மதாபானந்தா சாஹூ தெரிவித்துள்ளார்.
English summary
At least 12 people were injured, four of them critically, when a gas balloon cylinder exploded at ‘Kalinga Baliyatra’ festival ground here, police said today.
Story first published: Sunday, November 9, 2014, 16:18 [IST]