தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் எச்சரிக்கை!
நாடு முழுவதும் 12 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி : அசாம், பீஹார் உள்ளிட்ட 6 மாநிலங்கள் ஏற்கனவே வெள்ளத்தில் மிதந்து வரும் நிலையில் அடுத்த 3 நாட்களில் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மும்பையில் நேற்று ஒரே நாளில் 298 மில்லிமீட்டர் மழை பதிவானதால் நகரம் வெள்ளக்காடானது. காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் மட்டும் சுமார் 30 சென்ட்டீமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
Recommended Video

அடுத்த 24 மணி நேரத்திற்கு மஹாராஷ்டிராவின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேச மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மஹி, சபர்மதி, பனாலு மற்றும அவற்றின் கிளை நதிகள் ஏற்கனவே 94 சதவீத நிரம்பி வழிகிறது. திங்கட்கிழமை வரை கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 15 பகுதிகளில் 19 முதல் 4 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.

12 மாநிலங்களுக்கு எச்சரிக்கை
இந்திய வானிலை மையம் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனழை பெய்ய வாய்ப்புள்ளதால் மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், கோவா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, கேரளா, டாமன், டையூ உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
இந்த 12 மாநிலங்களில் மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே வெள்ளத்தில் மிதக்கிறது. அசாம், பீஹார், உத்தரபிரதேசம், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்திய பிரதேசம், குஜராத், கொங்கள், கோவா, கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்கள் கனமழை முதல் மிக கனமழையைப் பெற வாய்ப்புள்ளதாக அரசு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு
அடுத்த 3 நாட்களில் 14 ஆறுகள் மற்றும் அதன் கிளை நதிகளின் நீர்மட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்ழுடுகிறது. மிதமான வெள்ள நீரால் கோதாவரி, இந்திராவதி மற்றும் அதன் கிளை நதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தெலங்கானா மற்றம் ஆந்திர பிரதேசத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வெள்ள அபாயம் இல்லை
கர்நாடகாவின் 4 மாவட்டங்களை கடந்து வரும் காவேரி மற்றும் அதன் கிளை நதிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது, எனினும் நீரை தேக்கிவைக்க போதுமான நீர் தேக்க வசதி இருப்பதால் பாதிப்பு இல்லை என்று நீர்வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. பவானி மற்றும் மோயாறு நீர்மட்டமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ள மத்திய நீர்வள அமைச்சகம், உடனடியாக எந்த வெள்ள அபாயமும் இல்லை என்று கூறியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications