12 வயது மாணவியை பலமுறை பலாத்காரம் செய்து கருத்தடை மாத்திரை கொடுத்த பள்ளி முதல்வர்
போபால்: மத்திய பிரதேசத்தில் பள்ளி முதல்வர் ஒருவர் 12 வயது மாணவியை பலமுறை பலாத்காரம் செய்ததுடன் அவருக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை மாத்திரைகள் அளித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரில் உள்ள பள்ளி ஒன்றின் முதல்வராக உள்ளவர் சபன் மிஷ்ரா. அந்த பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி அவரிடம் டியூஷன் படித்துள்ளார். இதற்காக மாணவி மிஷ்ராவின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

அவர் எப்பொழுது எல்லாம் மிஷ்ராவின் வீட்டுக்கு சென்றாரோ அப்போது எல்லாம் அவர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாணவி தனக்கு வயிறு வலிப்பதாக மிஷ்ராவிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர் இரண்டு கருத்தடை மாத்திரைகளை மாணவியிடம் அளித்து அவரை வலுக்கட்டாயமாக உட்கொள்ள வைத்துள்ளார்.
வீட்டுக்கு சென்ற மாணவி தனக்கு வயிறு வலிப்பதாகவும் பள்ளி முதல்வர் மாத்திரை அளித்தும் சரியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் தனது பெற்றோரிடம் மிஷ்ரா தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மிஷ்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications