ராஜாஸ்தானில் சாலை விபத்து... டிராக்டரில் சென்ற 13 பேர் பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் லாரி, மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பில்வாலா மாவட்டத்தில் உள்ள பந்தூர் பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோபால்புரா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு, பலர் டிராக்டர் மூலமான பஜுன்டா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் வந்த டிராக்டர், மணல் மூட்டை ஏற்றிக் கொண்டு வந்த லாரியின் மோதி விபத்துத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், 7 பெண்கள், 1 சிறுமி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.