For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜாஸ்தானில் சாலை விபத்து... டிராக்டரில் சென்ற 13 பேர் பலி

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் லாரி, மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பில்வாலா மாவட்டத்தில் உள்ள பந்தூர் பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோபால்புரா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு, பலர் டிராக்டர் மூலமான பஜுன்டா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

13 killed in Rajasthan as tractor-trolley crashes into truck

அப்போது அவர்கள் வந்த டிராக்டர், மணல் மூட்டை ஏற்றிக் கொண்டு வந்த லாரியின் மோதி விபத்துத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், 7 பெண்கள், 1 சிறுமி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
Thirteen people — among them seven women and a minor girl — were killed and 30 were injured when their tractor-trolley crashed into a truck carrying gravel bags on hilly terrain near Bandore town, 80 km from Bhilwara district, late on Wednesday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X