உத்தரகாண்டில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து ரஷ்ய சுற்றுலா பயணிகள் 13 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
டேராடூன்: ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் ரஷ்யாவை சேர்ந்த 13 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் இமாச்சல பிரதேசத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தின் ரணம் ஆறுவதற்குள் மற்றொரு சம்பவம் உத்தரகாண்டில் நடந்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த 13 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று ரிஷிகேஷில் இருந்து கங்கோத்ரி நோக்கி சென்றுகொண்டிருந்தது. பஸ், ஹரிசில் என்ற இடத்துக்கு 2 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பகீரதி நதியில் கவிழ்ந்தது. இதில் 13 ரஷ்யர்களும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications