மேகாலயாவில் வெள்ளம்.. சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 13 பேரின் நிலை என்ன?
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் கிழக்கு ஜெயின்தியா மலைகளில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்க பொந்துகளில் பணியாற்றிய 13 பேர் வெள்ள நீரில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெறுகின்றன.
கிழக்கு ஜெயின்தியா மலைகளில் எலி பொந்து அளவிலான ஓட்டைகை தோண்டி அதன் மூலம் நிலக்கரி எடுப்பர். இது போன்ற பொந்துகள் ஆபத்து மிக்கவை என்பதால் இந்த நிலக்கரி சுரங்கத்துக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு தேசிய தீர்ப்பாயம் தடை விதித்தது.
இந்த தடையையும் மீறி இந்த சுரங்கம் லைடீன் நதிக்கு அருகே நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் 13 சுரங்க ஊழியர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

360 அடி ஆழம்
அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் இவர்கள் பள்ளம் தோண்டும் போது சரிந்து அதில் விழுந்தனர். சுமார் 360 அடி ஆழ பள்ளத்தில் 70 அடிக்கு நீர் தேங்கியுள்ளது.

ஆபத்து
இதனால் இவர்கள் வெளியே வர இயலவில்லை. இது குறித்து தகவலறிந்த 100-க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பொந்துகள் மிகவும் ஆபத்தானவை என கூறப்படுகிறது.

15 பேர் பலி
இந்த நிலையில் நிலக்கரி சுரங்கத்தில் படகுகள் மற்றும் கிரேன்கள் மூலம் 13 பேரையும் மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2012-ஆம் ஆண்டு இது போல் 15 பேர் சுரங்கத்தில் சிக்கி பலியாகிவிட்டனர். அவர்களது உடல்கள் கூட இதுவரை மீட்கப்படவில்லை.

இருட்டு பொந்து
இந்த சுரங்கத்தின் வரைப்படம் ஏதும் இல்லை. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பொந்துகள் இருட்டாக இருப்பதால் உள்ளே இருப்பவர்கள் குறித்து எதுவும் தெரியவில்லை. இதுதொடர்பாக சுரங்கத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 பேர்
தாய்லாந்தின் தாம் லூவாங் குகைக்கு 12 மாணவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர்களும் சென்றிருந்தனர். அப்போது திடீர் மழை வெள்ளம் காரணமாக அவர்கள் வெளியேற முடியாமல் சிக்கினர். இதையடுத்து பெரும் போராட்டத்துக்கு பின்னர் 13 பேரும் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications