மகாராஷ்டிராவில் கேடராக்ட் ஆபரேஷன் செய்து கொண்ட 14 பேரின் பார்வை பறிபோனது
வாஷிம்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வாஷிம் சிவில் மாவட்ட மருத்துவமனையில் கண்புரைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட 14 பேருக்கு பார்வை பறிபோயுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள சிவில் மாவட்ட மருத்துவமனையில் கடந்த மாதம் 23 பேருக்கு கண்புரைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 6ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலான காலகட்டத்தில் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டோரில் 9 பேர் கடந்த மாதம் 15ம் தேதி மருத்துவமனைக்கு திரும்பி வந்துள்ளனர். கண்களில் இருந்து நீர் வருகிறது, கண்கள் சிவப்பாக உள்ளது, பார்வை சரியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சவுகான் அவர்கள் அனைவரையும் அகோலாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு வந்த 5 பேரையும் அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த 14 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்களை ஜெ.ஜெ. மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அறுவை சிகிச்சை செய்த 23 பேரும் ஜெ.ஜெ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் 9 பேரின் பார்வையை மற்றும் டாக்டர்களால் காப்பாற்ற முடிந்தது. மற்ற 14 பேரின் பார்வை பறிபோனது.
வாசிம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் முறையாக சுத்திகரிக்கப்படாததால் அவர்களின் கண்களில் பாக்டீரியா தாக்குதல் ஏற்பட்டு பார்வை பறிபோனதாக ஜெ.ஜெ. மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அறுவை சிகிச்சை செய்த வாஷிம் மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications