மகாராஷ்டிராவில் கேடராக்ட் ஆபரேஷன் செய்து கொண்ட 14 பேரின் பார்வை பறிபோனது
வாஷிம்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வாஷிம் சிவில் மாவட்ட மருத்துவமனையில் கண்புரைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட 14 பேருக்கு பார்வை பறிபோயுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள சிவில் மாவட்ட மருத்துவமனையில் கடந்த மாதம் 23 பேருக்கு கண்புரைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 6ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலான காலகட்டத்தில் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டோரில் 9 பேர் கடந்த மாதம் 15ம் தேதி மருத்துவமனைக்கு திரும்பி வந்துள்ளனர். கண்களில் இருந்து நீர் வருகிறது, கண்கள் சிவப்பாக உள்ளது, பார்வை சரியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சவுகான் அவர்கள் அனைவரையும் அகோலாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு வந்த 5 பேரையும் அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த 14 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்களை ஜெ.ஜெ. மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அறுவை சிகிச்சை செய்த 23 பேரும் ஜெ.ஜெ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் 9 பேரின் பார்வையை மற்றும் டாக்டர்களால் காப்பாற்ற முடிந்தது. மற்ற 14 பேரின் பார்வை பறிபோனது.
வாசிம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் முறையாக சுத்திகரிக்கப்படாததால் அவர்களின் கண்களில் பாக்டீரியா தாக்குதல் ஏற்பட்டு பார்வை பறிபோனதாக ஜெ.ஜெ. மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அறுவை சிகிச்சை செய்த வாஷிம் மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications