ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் சாதனை படைத்த பீகாரின் 14 வயது மாணவன்
பாட்னா: இந்தியாவில் நடைபெற்ற ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் பீகாரின் 14 வயது மாணவர் ஒருவர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
பீகார் மாநிலம் தாம்பூரைச் சேர்ந்த விவசாயி கமலாகந்த் திவாரி என்பவரின் மகன் சிவானந்த்.இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் இவர் 93 சதவீத மதிபெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இதன் பின்னர் சிறப்பு அனுமதி மூலம் ஐ.ஐ.டி தேர்வு எழுதினார். இதில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளார் சிவானந்த்.

இதுபற்றி கமலாகந்த் கூறுகையில், "எனது மகன் ஐ.ஐ.டி தேர்வில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. தன்னுடைய சிறிய வயதில் அவர் பெற்ற இந்த வெற்றி மூலம் தன்னுடைய அறிவுத்திறமையை நிரூபித்துள்ளார்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
வெற்றி பெற்றுள்ள மாணவன் சிவானந்த் எதிர்காலத்தில் இயற்பியல் துறையில் விஞ்ஞானியாக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications