Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு... கண்காணிப்பு வளையத்தில் 150 இந்தியர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகின் மிக கொடூரமான பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் உள்ள 150 இந்தியர்கள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

150 Indians under surveillance for ISIS link

இது தொடர்பான உளவுத்துறை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருக்கும் 150 பேரில் பெரும்பாலானோர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
  • இந்த 150 பேரும் இணையம் மூலமாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் நாள்தோறும் தொடர்பில் இருப்பவர்கள்.
  • ஈராக்சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் 23 இந்தியர்கள் இணைந்திருந்தனர்.
  • இவர்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் மும்பைக்கே திரும்பிவிட்டார்.
  • மத்திய கிழக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் இணைய முயற்சித்த 30 இந்தியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
  • தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இருக்கும் இந்தியர்களில் 2 பேர் மும்பை புறநகரான கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர்கள்; ஒருவர் ஆஸ்திரேலியா வாழ் காஷ்மீரி, தெலுங்கானா, கர்நாடகாவில் இருந்து தலா ஒருவர், ஓமனைச் சேர்ந்த இந்தியர், சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தியர்.
  • ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு கொல்லப்பட்ட 6 பேரில் 3 பேர் இந்தியன் முஜாஹிதீன்கள்; மகாராஷ்டிராவில் இருந்து 2 பேர், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர்.
  • ஐக்கிய அரபு அமிரேட்ஸில் இருந்து கடந்த செப்டம்பர் 15-ந் தேதியன்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 4 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
  • அதேபோல் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட ஆஃப்சா ஜபீன் என்ற நிக்கி ஜோசப் எனும் பெண்ணையும் ஐக்கிய அரபு அமிரேட்ஸ் இந்தியாவுக்கு நாடு கடத்தியது.
  • துருக்கி வழியாக சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய திட்டமிட்டிருந்த சல்மான் முகிதீன் என்பவர் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
  • இருப்பினும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவில் குறிப்பிடும்படியான தொடர்புகளை கொண்டிருக்கவில்லை.
  • சில இந்திய இளைஞர்களை ஈர்த்து அவர்கள் மூலமாக இந்தியாவில் தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் மேற்கொண்டு வருகிறது.
  • ஆகையால் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 150 இந்தியர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+