Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜோலியிடம் நான் படாத சித்திரவதை இல்லை.. தாங்க முடியலை.. சிலியின் மகன் கண்ணீர்

16 வயது சிறுவனையும் கொலைகார ஜோலி சித்ரவதை செய்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Jolly Sensational Kerala Serial Killer Explained : கேரளாவை உலுக்கிய 6 சயனைடு கொலையில் தொடரும் அதிர்ச்சி !-வீடியோ

    கோழிக்கோடு: ஜோலி மோசமான குணம் கொண்டவர். என்னை ஒரு மகன் போலவே அவர் பாவிக்கவில்லை. கொடுமைப்படுத்தினார் என்று ஜோலியின் கணவர் ஷாஜுவுக்கும் - சிலிக்கும் இடையே பிறந்த மகன் கூறியுள்ளார்.

    தனது சொத்து ஆசைக்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும் கணவர் குடும்பத்தை கொடூரமா முறையில் விஷம் கொடுத்து கைதாகியுள்ளார் ஜோலி.

    16 year old boy confessed to kerala police

    ஜோலி விஷயத்தில் தோண்டத் தோண்ட பரபரப்புத் தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில் ஜோலியின் 2வது கணவர் ஷாஜுவுக்கும் - சிலிக்கும் இடையே பிறந்த மகன் ஜோலி குறித்த பல தகவல்களை போலீஸாரிடம் கூறியுள்ளார்.

    சிலியையும் ஜோலிதான் விஷம் வைத்துக் கொன்றார். 16வது வயதாகும் சிலியின் மகன் போலீஸாரிடம் கூறுகையில்,எனது தாயார் இறந்த பின்னர் ஜோலியை எனது தந்தை மணந்து கொண்டார். அதன் பிறகு வீட்டில் நான் படாத சித்திரவதை கிடையாது.

    என்னை சொந்தப் பிள்ளை போல அவர் என்றுமே பார்த்துக் கொண்டதில்லை. அந்நியன் போலவே வீட்டில் நான் நடத்தப்பட்டேன். என் மீது எப்போதுமே வெறுப்பை கக்கி வந்தார் ஜோலி.

    என்னை ஜோலி பல்வேறு வகையில் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார். எனது தாய்க்கு அவர் கொடுத்த காபியைக் குடித்த பின்னர்தான் எனது அம்மா உயிரிழந்தார். அதில் விஷம் கலந்திருந்ததால்தான் அவர் இறந்தார் என்று கூறியுள்ளார் சிலியின் மகன்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+