மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு.. 17,500 கனஅடியாக அதிகரிப்பு
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 17,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 17,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மீண்டும் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு நீர்திறப்பு மீண்டும் அதிகமாகி உள்ளது.

தற்போது காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 17,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் நீரின் அளவு 10,800 கனஅடியில் இருந்து 17,800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.40 அடியாகவும், நீர்இருப்பு 93.534 டிஎம்சியாகவும் உள்ளது
காவிரி வெள்ளம் காரணமாக ஏற்கனவே முக்கொம்பு, திருச்சி இரும்பு பாலம் உடைந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
முக்கொம்பில் தற்போது அவசர அவசரமாக தடுப்பு அணை கட்டப்பட்டு வருகிறது. இந்த வெள்ளம், காரணமாக அந்த பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications