Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திரா- ஒடிசாவில் தொடரும் கனமழை 38 பேர் பலி!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழைக்கு 38 பேர் பலியாகி உள்ளனர். இதில் 28 பேர் ஆந்திராவிலும், 10 பேர் ஒடிசாவிலும் பலியாகி உள்ளனர்.

வங்க கடலில் நிலை கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அங்கிருந்து நகர்ந்து, தெலுங்கானாவை ஒட்டி உள்ள கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் நிலை கொண்டு உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலையால், ஆந்திராவில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழைக்கு இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அணைகள் நிரம்பின

அணைகள் நிரம்பின

கனமழை காரணமாக ஆந்திர மாநிலத்தின் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. கிருஷ்ணா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலோ ஆந்திரா, ராயலசீமா போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்திலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மீட்புப்பணிகள்

மீட்புப்பணிகள்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு, நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை முடுக்கி விடுமாறு முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசாவில் வெள்ளம்

ஒடிசாவில் வெள்ளம்

இதனிடையே ஒடிசாவில் ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. கரையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடலோர மாவட்டங்களில் வசித்த 1.5 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இயல்பு வாழ்க்கை

இயல்பு வாழ்க்கை

தொடர்ந்து பெய்யும் மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. வீடு இடிந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். புயல் தாக்குதலில் இருந்து மீள முடியாத நிலையில் ஒடிசாவை தற்போது பெய்யும் தொடர் மழை மேலும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது.

ரயில்கள் ரத்து

ரயில்கள் ரத்து

ஆந்திரா - ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து அவுராவுக்கு இன்று காலை 8.45 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டது.

மழை வலுக்கும்

மழை வலுக்கும்

இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம் அடைந்து இருப்பதாகவும் இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆந்திரா-ஒடிசாவில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+