பள்ளி பேருந்து விபத்து... 2 குழந்தைகளைப் பறி கொடுத்த தந்தை மாரடைப்பால் மரணம்
ஹைதராபாத்: பள்ளி பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் தனது இரண்டு குழந்தைகள் பலியான சோகத்தை தாங்க முடியாமல் அக்குழந்தைகளின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்தார். ஒரே நாளில் அக்குடும்பத்தில் மூவர் உயிரிழந்ததால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவர்கள் பயணம் செய்த பள்ளி பேருந்து ஒன்று நேற்று காலை ஆளில்லாத ரயில்வே கேட்டைக் கடக்க முற்பட்ட போது விபத்தில் சிக்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே 18 குழந்தைகள் பலியாயினர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 21 குழந்தைகளில், 7 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் சோகம் என்னவென்றால், இந்த விபத்தில் பலியானவர்களில் சிலர் அண்ணன், அக்கா, தம்பி மற்றும் தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான்.
அந்தவகையில், கிருஷ்ணாபாத் பகுதியைச் சேர்ந்த அக்காள், தம்பி ரஜியா, ஹமீத் ஆகியோரும் இந்த விபத்தில் பலியானார்கள். இவர்களின் தந்தை முகமது வகீத் விபத்து நடந்த 10 நிமிடத்துக்கு முன்புதான் குழந்தைகளை பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், சிறிது நேரத்திலேயே பள்ளி பேருந்து ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக வகீத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. அதிர்ச்சியடைந்த வகீத் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அங்கு தனது குழந்தைகளை சடலமாகக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு வகீத் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி வகீத் பரிதாபமாக உயிரிழந்தார்.
சில மணி நேரங்களிலேயே கணவன் மற்றும் தன் இரண்டு குழந்தைகளை இழந்து அனாதையான வகீத்தின் மனைவி கதறி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications