பள்ளி பேருந்து விபத்து... 2 குழந்தைகளைப் பறி கொடுத்த தந்தை மாரடைப்பால் மரணம்
ஹைதராபாத்: பள்ளி பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் தனது இரண்டு குழந்தைகள் பலியான சோகத்தை தாங்க முடியாமல் அக்குழந்தைகளின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்தார். ஒரே நாளில் அக்குடும்பத்தில் மூவர் உயிரிழந்ததால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவர்கள் பயணம் செய்த பள்ளி பேருந்து ஒன்று நேற்று காலை ஆளில்லாத ரயில்வே கேட்டைக் கடக்க முற்பட்ட போது விபத்தில் சிக்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே 18 குழந்தைகள் பலியாயினர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 21 குழந்தைகளில், 7 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் சோகம் என்னவென்றால், இந்த விபத்தில் பலியானவர்களில் சிலர் அண்ணன், அக்கா, தம்பி மற்றும் தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான்.
அந்தவகையில், கிருஷ்ணாபாத் பகுதியைச் சேர்ந்த அக்காள், தம்பி ரஜியா, ஹமீத் ஆகியோரும் இந்த விபத்தில் பலியானார்கள். இவர்களின் தந்தை முகமது வகீத் விபத்து நடந்த 10 நிமிடத்துக்கு முன்புதான் குழந்தைகளை பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், சிறிது நேரத்திலேயே பள்ளி பேருந்து ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக வகீத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. அதிர்ச்சியடைந்த வகீத் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அங்கு தனது குழந்தைகளை சடலமாகக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு வகீத் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி வகீத் பரிதாபமாக உயிரிழந்தார்.
சில மணி நேரங்களிலேயே கணவன் மற்றும் தன் இரண்டு குழந்தைகளை இழந்து அனாதையான வகீத்தின் மனைவி கதறி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications