உ.பி.யில் கொடூரத்தின் உச்சம்... 18 மாதக் குழந்தையை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்
படவுன்: உத்திரப்பிரதேசத்தில் 18 மாதக் குழந்தையை பலாத்காரம் செய்த நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள சதர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் நந்தா என்ற நபர், தனது பக்கத்து வீட்டில் இருந்த 18 மாதக் குழந்தையைக் கடத்திச் சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பின்னர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு தலைமறைவாகி விட்டான் நந்தா. இரவு முழுவதும் தொடர்ந்து குழந்தை வலியால் அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்குழந்தையின் பெற்றோர் மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பாக அதன் பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப் பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நந்தாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications