மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு: அபு சலீம் உட்பட 6 பேர் குற்றவாளிகள், ஒருவர் விடுதலை!
மும்பை : 1993 ம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மும்பையில் உள்ள பயங்கரவாதம் மற்றும் சீர்குலைப்பு செயல்கள் தடுப்பு பிரிவு நீதிமன்றம் (தடா நீதிமன்றம்) விசாரித்து வந்தது.
2006 ம் ஆண்டு முக்கிய விசாரணை நிறைவு பெற்று 100 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதேநேரம், இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக 2003 முதல் 2010 ம் ஆண்டு வரை 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு வந்தது.

குண்டுவெடிப்பு நடைபெற்று சுமார் 24 ஆண்டுகளுக்கு பின் இன்று 7 பேர் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த 7 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட பிரபல நிழலுலக தாதா அபு சலீம், தாகிர் மெர்சன்ட், பெரோஸ் அப்துல் ரஷித் கான், தாவூத் கூட்டாளி முஸ்தபா தோஸ்சா, கரிமுல்லா ஷெய்க், ரியாஸ் சித்திக் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளார். சதி திட்டம், கொலை உள்ளிட்ட செயல்களுக்காக இந்திய தண்டனை சட்டம், தடா, வெடிகுண்டு ஆயுத தடுப்பு சட்டம் உள்ளிட்டவற்றின்கீழ் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் அனைவர் மீதும், நாட்டுக்கு எதிரான போர் என்ற குற்றப்பிரிவின்கீழ் தண்டனை வழங்கப்படவில்லை. அந்த தண்டனை பிரிவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.
தகுதிந்த ஆதாரம் இல்லை என கூறி, குற்றம்சாட்டப்பட்டிருந்த அப்துல் கய்யாம் ஷெயிக் என்பவரை விடுதலை செய்துள்ளார் நீதிபதி. இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம், டைகர் மேமுன் உட்பட மேலும் 33 குற்றவாளிகள் இன்னமும் தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.
குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications