6 மாதங்களில் 8,400 சாலை விபத்துக்கள்... 2,640 பேர் பலி - ஆந்திர போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்

Subscribe to Oneindia Tamil

விஜயவாடா: நடப்பாண்டில் இதுவரை ஆந்திராவில் நடந்த 8400 சாலை விபத்துக்களில் 2,640 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

சமயங்களில் மற்றவர்களின் கவனக் குறைவு மற்றும் சாலை விதிமீறல்கள் கூட விபத்துக்களுக்குக் காரணமாகி விடுகின்றன. அந்தவகையில், ஆந்திராவில் நடப்பாண்டில் அதாவது கடந்த 6 மாதங்களில் மட்டும் 8400 சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பாதுகாப்பான சாலைப் பயணம் என்பதை வலியுறுத்தி நேற்று விஜயவாடாவில் உள்ள துணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராகவா ராவ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இரவு நேரங்களில்...

இரவு நேரங்களில்...

பெரும்பாலான சாலை விபத்துக்கள் இரவு நேரங்களில் தான் நடைபெறுகிறது.

சாலை விதிமுறை மீறல்...

சாலை விதிமுறை மீறல்...

வாகனம் ஓட்டுபவர்கள் போதிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காததே விபத்துகளுக்கு மூல காரணமாகிறது.

சிறப்பு வாகன பரிசோதகர்கள்...

சிறப்பு வாகன பரிசோதகர்கள்...

இனி வரும் காலங்களில் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், போக்குவரத்துத் துறை சார்பாக மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களின் உடல் நிலை குறித்து பரிசோதனை செய்ய தனி வாகன பரிசோதகர்கள் நியமிக்கப் படுவார்கள் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உயிர்ப்பலி, காயம்...

உயிர்ப்பலி, காயம்...

மேலும், இந்தாண்டு இதுவரை 8,400 சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாகத் தெரிவித்த ராகவா ராவ், அந்த விபத்துக்கள் மூலமாக 2,640 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9,700 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+