For Quick Alerts
For Daily Alerts
Just In
பீகாரில் வாக்குப் பதிவை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் சதி- இருவர் பலி
பாட்னா: பீகாரில் லோக்சபா தேர்தலை சீர்குலைக்கும் வகையில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.
பீகாரில் இன்று காலை 6 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாக முங்கார் மற்றும் ஜமுய் பகுதிக்கு இடையே மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதலை நடத்தினர். இதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்.
மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Comments
English summary
Two jawans of the Central Reserve Police Force (CRPF) were killed and four others injured in a landmine blast in Bihar early this morning. The blast took place between Jamui, where voting is being held in the third phase of Lok Sabha election, and Munger.
Story first published: Thursday, April 10, 2014, 11:23 [IST]