பீகாரில் வாக்குப் பதிவை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் சதி- இருவர் பலி
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகாரில் லோக்சபா தேர்தலை சீர்குலைக்கும் வகையில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.
பீகாரில் இன்று காலை 6 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாக முங்கார் மற்றும் ஜமுய் பகுதிக்கு இடையே மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதலை நடத்தினர். இதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்.

மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications