அதிகாலையில் என்கவுண்டர்... ஜம்மு- காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
குல்காம் மாவட்டத்தில் உள்ள காடாபூரா பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படை வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஜீனத் உல் இஸ்லாம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து நவீனரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications