முலாயம் எச்சரிக்கை 2 அமைச்சர்களை நீக்கி அகிலேஷ் உத்தரவு
லக்னௌ: உத்தர பிரதேச மாநிலத்தில் ஆனந்த் சிங் மற்றும் மனோஜ் பாரஸ் ஆகிய இரு அமைச்சர்களை நீக்கி முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்யும் உத்திர பிரதேசத்தில் விவசாயத்துறை அமைச்சராக இருந்த ஆனந்த் குமார் சிங் மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் இணையமைச்சராக இருந்த மனோஜ் பராஸ் ஆகியோர் கட்சி தலைவர் முலாயம் சிங்கின் கோபத்துக்குள்ளானதால் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கடந்த வாரம் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங் உத்திர பிரதேச அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்திருந்தார். அவர்களுடைய மோசமான செயல்பாடுகளால் கட்சி வலுவிழந்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
முகஸ்துதி செய்பவர்களிடமிருந்து விலகியிருக்குமாறு தனது மகனும், உத்திர பிரதேச மாநில முதலமைச்சருமான அகிலேஷ் யாதவை அவர் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் இரண்டு அமைச்சர்களை நீக்கி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் அகிலேஷ் யாதவ். ஆனந்த் குமார் சிங்கின் மகன் கீர்த்திவர்தன் பாரதிய ஜனதாவில் சேர்ந்ததால் முலாயம் சிங் கோபமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மனோஜ் பராஸ் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக பல புகார்கள் வந்ததால் அவர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications