2014 தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா பிரச்சினை இல்லை.. ராகுல் காந்தி அதிரடிப் பேச்சு
ராஜ்கோட்: 2014 லோக்சபா தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா சாவா பிரச்சினை அல்ல. தேர்தலுக்குப் பிறகும் காங்கிரஸ் கட்சி நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
அவரது இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி மீது நம்பிக்கை இல்லாதது போல ராகுலின் பேச்சு அமைந்திருப்பதாக சலசலப்பும்
ஏற்பட்டுள்ளது.
ராஜ்கோட்டில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது குறித்து ஜாம்நகர் காங்கிரஸ் எம்.பி. விக்ரம் மடம் கூறுகையில், நமது பலவீனங்களிலிரு்நது நாம் வெளி வர வேண்டும். நமது பலத்தை வெளிக்காட்ட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினாராம்.

குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் ராகுல் காந்தி. வடக்கு குஜராத் மற்றும் செளராஷ்டிர பகுதி காங்கிரஸ் பணியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில்தான் இப்படிக் கூறியுள்ளார். இந்தக் கூட்டத்திற்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ராகுல் மேலும் பேசியதாக விக்ரம் மடம் கூறுகையில்,2014 பொதுத் தேர்தல் குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அது வாழ்வா, சாவா நிலையில் இல்லை. தேர்தலுக்குப் பிறகும் காங்கிரஸ் கட்சி நிலைத்திருக்கும். காங்கிரஸ் கட்சிதான் நாட்டின் முதன்மையான அரசியல் கட்சி என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.
நேற்று அகமதாபாத்தில் ராகுல் பேசுகையில், 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் வெல்லும் என்று உறுதிபடக் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தக் கூட்டத்தில் இது வாழ்வா சாவா பிரச்சினை இல்லை என்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மோடி அலையால் கலங்கிப் போயிருந்த குஜராத் காங்கிரஸாருக்கு ராகுல் காந்தியின் வருகை உற்சாகத்தைக் கொடுத்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications