சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதாரம் கேட்பதா? காங்கிரஸ் செய்வது தவறு.. மோடி பகீர் குற்றச்சாட்டு!
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு காங்கிரஸ் கட்சி ஆதாரம் கேட்பது தவறான விஷயம் என்று பீகாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பாட்னா: சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு காங்கிரஸ் கட்சி ஆதாரம் கேட்பது தவறான விஷயம் என்று பீகாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பீகாரில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக கட்சி மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை இன்று நடத்தியது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்த கூட்டம் நடந்தது. இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கலந்து கொண்டது.
இதில் பிரதமர் மோடி சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து பேசினார். சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் கேள்விகள் குறித்தும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

கேள்வி
மோடி தனது பேச்சில், பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலை மக்கள் கொண்டாடுகிறார்கள். சிலர் மட்டும் அந்த தாக்குதல் குறித்து சந்தேகம் அடைகிறார்கள். காங்கிரஸ் பாலகோட் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்புகிறது சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து எதிர்க்கட்சியினர் சந்தேகம் அடைகிறார்கள்.

ஆதாரம்
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு அவர்கள் ஆதாரம் கேட்கிறார்கள். காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் நமது ராணுவத்தை அவமானப்படுத்துகிறது. நமது எதிரிகளுக்கு பலன் அளிக்கும் கேள்விகளை ஏன் அவர்கள் கேட்கிறார்கள்

காங்கிரஸ்
இந்தியாவின் எதிரிகளை காங்கிரஸ் கூட்டணி சந்தோசபடுத்த முயல்கிறது. நாம் எல்லாம் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றாக பேசவேண்டும். ஆனால் காங்கிரஸ் கூட்டணி நமது எதிரி நாட்டிற்கு ஆதரவாக பேசுகிறது.

கூட்டம் ஏன்
நாம் இப்போதான் இணைய வேண்டும். ஆனால் காங்கிரஸ் 21 கட்சிகளுடன் சேர்ந்து அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறது. எல்லோரும் சேர்ந்து பாஜகவிற்கு எதிராக பேசுகிறார்கள்.மக்கள் இதை மன்னிக்க மாட்டார்கள், என்று மோடி தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications