மும்பையில் சிகரெட் வாங்க கடைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 2 வாலிபர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

மும்பை: சிகரெட் வாங்க கடைக்கு சென்ற இளம் பெண் பாலியல் சில்மிஷம் செய்த 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை நகரின் சியோன்-தாராவி பாலத்தின் மேல் நேற்று அதிகாலை 3 மணியளவில் இளம் பெண் தனது காதலனுடன் சிகரெட் வாங்குவதற்கு கடை திறந்திருக்குமா என்று பார்த்தபடி பைக்கில் மெதுவாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 3பேர் கொண்ட இளைஞர் கூட்டம், அப்பெண்ணை, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போவுக்குள் இழுத்துப்போட்டு பாலியல் சில்மிஷங்களை செய்தனர். தடுக்க முற்பட்ட காதலனை அடித்து உதைத்தனர்.

இதன்பிறகு அந்த ஜோடியிடமிருந்த செல்போன், ரொக்கப்பணம் போன்றவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து பன்ட்ரா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட 21 வயது பெண், டிராவல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும், 22 வயதான காதலன் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.

விசாரணை நடத்திய போலீசார், பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட அப்துல் சையிக் (22), பர்கத் சையது (21) ஆகியோரை கைது செய்தனர். கூட்டாளியான மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+