மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸின் 'பிரஸ் மீட்' யுத்தம்! ஒரே நாளில் 24 செய்தியாளர்கள் சந்திப்பு!!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 24 செய்தியாளர்கள் சந்திப்புகளை அதிரடியாக நடத்த திட்டமிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் அமர்ந்து ஓராண்டு காலம் ஆகிவிட்டது. பாரதிய ஜனதா கட்சி ஓராண்டு விழா நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சி இன்று முதல் மே 26-ந் தேதி வரை நாடு முழுவதும் 100 செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவது என தீர்மானித்துள்ளது. இதன் முதல் கட்டமாக இன்று நாடு முழுவதும் 24 நகரங்களில் செய்தியாளர்கள் சந்திப்புகள் நடத்தப்பட உள்ளன.
சென்னையில் மிலிந்த் தியோரா, ஸ்ரீநகரில் ஷகீல் அகமது ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். திரும்பிய திசையெங்கும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவதன் மூலம் மோடி அரசுக்கு எதிராக வலுவான பிரசாரத்தை முன்னெடுக்க முடியும் என்பது காங்கிரஸின் நம்பிக்கை.












Click it and Unblock the Notifications