கர்நாடக சிறைகளில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் 252 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை!
பெங்களூரு: கர்நாடக மாநில சிறைகளில் 14 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த 252 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுள் தண்டனை கைதிகளை மாநில அரசு விடுதலை செய்யலாமா? இல்லையா? என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் உடல் நிலை, நன்னடத்தை விதிகளை அடிப்படையாக கொண்டும் வழக்கின் தன்மையையும் கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்யலாம். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகள் விடுதலை கோரி அரசிடம் முறையிட்டு இருக்கிறார்கள். ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க மாநில அரசு முன்வர வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து கர்நாடக அரசு 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளின் பட்டியலையும், விடுதலை செய்ய வேண்டியவர்கள் பற்றிய பரிந்துரையையும் சமர்ப்பிக்குமாறு சிறைத்துறைக்கு உத்தர விட்டது.
இதனைத் தொடர்ந்து கர்நாடக சிறைத்துறை 260 ஆயுள் தண்டனை கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது.
இதனை பரிசீலனை செய்த கர்நாடக அரசு 14 ஆண்டு களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள், கைதிகளின் உடல் நிலை, சிறையில் நடந்துகொண்ட முறை உள்ளிட்ட வற்றை ஆய்வு செய்தது. இதில் 252 கைதிகள் விடுதலை செய்ய தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டு பெயர் பட்டியல் ஆளுநர் வஜூபாய் வாலாவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்பட்டியலுக்கு ஆளுநர் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சிறைகளில் உள்ள 252 ஆயுள் தண்டனை கைதிகள் நேற்று மாலை 5.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications