முறைகேடாக வீடு ஒதுக்கீடு... 27 நீதிபதிகளுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்!!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் அரசிடம் இருந்து முறைகேடாக வீடு ஒதுக்கீடு பெறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மும்பை, ஒடிஷா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 27 நீதிபதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

குஜராத் அரசு நீதிபதிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் பெரும் சர்ச்சை வெடித்தது. நீதிபதிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக நீதிபதிகள் சேத்னா மற்றும் வியாஸ் ஆகியோர் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.

27 judges, sitting & retired, get High Court notice for plots they got from Gujarat govt

இந்தக் கடிதங்களையே பொதுநலன் வழக்காக எடுத்து விசாரித்தது குஜராத் உயர்நீதிமன்றம். இந்த வழக்கை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி வி.எம். சகாய் அதிரடியாக 27 நீதிபதிகள் மற்றும் குஜராத் அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.

இந்த 27 பேரில் உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியில் உள்ள நீதிபதி, மும்பை, ஒடிஷா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகியோரும் அடங்குவர்.

மேலும் இந்தந் நோட்டீஸ் அனுப்பியுள்ள தற்காலிக தலைமை நீதிபதி சகாய் நாளையுடன் பணி ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+