2ஜி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை: கனிமொழியின் கோரிக்கை நிராகரிப்பு
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்குமாறு திமுக எம்.பி. கனிமொழி மற்றும் சாகித் பல்வா உள்ளிட்டோர் விடுத்த கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் சாகித் பல்வா உள்ளிட்ட பலர் மீதான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இம்மனு மீதான விசாரணையின்போது, தங்கள் தரப்பில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என சிபிஐ-யின் புதிய வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2ஜி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி, திமுக எம்.பி. கனிமொழி மற்றும் சாகித் பல்வா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் 2ஜி ஊழல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
-
தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை.. விஜய்க்கு பெரிய சவால் -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications