கலைஞர் டிவிக்கு ரூ125 கோடி-'சீனி'யின் இந்தியா சிமெண்ட்ஸ், மல்லையாவின் யுபி குழும நிர்வாகி சாட்சியம்
டெல்லி: கலைஞர் டிவிக்கு 'விளம்பரங்களுக்காக" ரூ125 கோடி கொடுத்தது உண்மைதான் என்று என்.சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் விஜய் மல்லையாவின் யுபி குழும நிர்வாகிகள் டெல்லி நீதிமன்றத்தில் சாட்சியம் அலித்துள்ளார்.
மத்திய அமைச்சராக ஆ. ராசா பதவி வகித்த போது ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு அடிமாட்டு விலைக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது. இதற்கு பிரதிபலனாக ரூ 214 கோடியை ஸ்வான் டெலிகாமானது, டிபி ரியாலிட்டி என்ற நிறுவனம் மூலம் கலைஞர் டிவிக்கு கொடுத்தது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விசாரணையை சிபிஐ தொடங்கிய உடன் இந்த பணத்தை கடனாக வாங்கியதாகவும் பின்னர் வட்டியுடன் திருப்பி கொடுத்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறியது. உண்மையில் ஸ்வான் கொடுத்த பணத்தை கலைஞர் டிவி செலவழித்துவிட்டது.
இதனால் கலைஞர் டிவி ரூ214 கோடியை உடனே திருப்பித் தருவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த என். சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யூபி குழுமமும்தான் கலைஞர் டிவிக்கு பணம் கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
சிபிஐ தொடர்ந்த வழக்கில் இந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தது. அத்துடன் இந்த ரூ214 கோடி பணப் பரிமாற்றத்தில் அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளது என்று அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 31-ந் தேதியன்று ஆ.ராசா. கனிமொழி உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவன நிர்வாகிகள் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் தற்போது அமலாக்கப் பிரிவு சாட்சிகளின் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மற்றும் யுபி குழுமம் ஆகியவற்றின் நிர்வாகிகள் சாட்சியம் அளித்தனர்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆர். முரளிதர் தமது சாட்சியத்தில், கலைஞர் டிவிக்கு ரூ 60 கோடி பணம் கொடுத்தது உண்மைதான்.. அது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பரத்துக்கான தொகை; இதில் எந்த ஒரு சட்டவிரோத பரிவர்த்தனையும் இல்லை என்றார்.
இதேபோல் விஜய் மல்லையாவின் யுபி குழுமத்தின் முதுநிலை மேலாளர் எஸ். ஆனந்த பிரசாத்தும், கலைஞர் டிவியுடன் 8 ஆண்டுகால விளம்பர ஒப்பந்த அடிப்படையில் ரூ65 கோடி பணம் செலுத்தப்பட்டது. இதில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை எதுவும் இல்லை என்று கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications