கலைஞர் டிவிக்கு ரூ125 கோடி-'சீனி'யின் இந்தியா சிமெண்ட்ஸ், மல்லையாவின் யுபி குழும நிர்வாகி சாட்சியம்
டெல்லி: கலைஞர் டிவிக்கு 'விளம்பரங்களுக்காக" ரூ125 கோடி கொடுத்தது உண்மைதான் என்று என்.சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் விஜய் மல்லையாவின் யுபி குழும நிர்வாகிகள் டெல்லி நீதிமன்றத்தில் சாட்சியம் அலித்துள்ளார்.
மத்திய அமைச்சராக ஆ. ராசா பதவி வகித்த போது ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு அடிமாட்டு விலைக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது. இதற்கு பிரதிபலனாக ரூ 214 கோடியை ஸ்வான் டெலிகாமானது, டிபி ரியாலிட்டி என்ற நிறுவனம் மூலம் கலைஞர் டிவிக்கு கொடுத்தது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விசாரணையை சிபிஐ தொடங்கிய உடன் இந்த பணத்தை கடனாக வாங்கியதாகவும் பின்னர் வட்டியுடன் திருப்பி கொடுத்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறியது. உண்மையில் ஸ்வான் கொடுத்த பணத்தை கலைஞர் டிவி செலவழித்துவிட்டது.
இதனால் கலைஞர் டிவி ரூ214 கோடியை உடனே திருப்பித் தருவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த என். சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யூபி குழுமமும்தான் கலைஞர் டிவிக்கு பணம் கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
சிபிஐ தொடர்ந்த வழக்கில் இந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தது. அத்துடன் இந்த ரூ214 கோடி பணப் பரிமாற்றத்தில் அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளது என்று அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 31-ந் தேதியன்று ஆ.ராசா. கனிமொழி உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவன நிர்வாகிகள் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் தற்போது அமலாக்கப் பிரிவு சாட்சிகளின் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மற்றும் யுபி குழுமம் ஆகியவற்றின் நிர்வாகிகள் சாட்சியம் அளித்தனர்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆர். முரளிதர் தமது சாட்சியத்தில், கலைஞர் டிவிக்கு ரூ 60 கோடி பணம் கொடுத்தது உண்மைதான்.. அது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பரத்துக்கான தொகை; இதில் எந்த ஒரு சட்டவிரோத பரிவர்த்தனையும் இல்லை என்றார்.
இதேபோல் விஜய் மல்லையாவின் யுபி குழுமத்தின் முதுநிலை மேலாளர் எஸ். ஆனந்த பிரசாத்தும், கலைஞர் டிவியுடன் 8 ஆண்டுகால விளம்பர ஒப்பந்த அடிப்படையில் ரூ65 கோடி பணம் செலுத்தப்பட்டது. இதில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை எதுவும் இல்லை என்று கூறினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications