2ஜி தீர்ப்பு: சசி தரூர் வரவேற்பு; ஆதாரம் இருந்தால் அப்பீல் செய்ய அன்னா யோசனை!
2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு வழக்கின் தீர்ப்பு குறித்து முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
Recommended Video

டெல்லி : 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து தேசிய அளவில் பல்வேறு தலைவர்கள் தீர்ப்பு ஆதரித்தும், எதிர்த்தும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இருந்து அனைவரையும் விடுதலை செய்துள்ளார் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி.
நீதிபதியின் இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,விற்கு ஆதரவாக பலரும் சமூக வலைத்தளங்களில் ட்விட் செய்து வருகிறார்கள்.

காங்கிரஸ் மீதான காழ்ப்புணர்ச்சி
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், பா.ஜ.க.,வின் மோசமான முகத்திரை இந்த விஷயத்தில் கிழிந்துவிட்டது. இத்தனை நாள் அவர்கள் செய்த பொய்பிரச்சாரமும், காங்கிரஸ் மீதான காழ்ப்புணர்ச்சியும் இந்த தீர்ப்பின் மூலம் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. எனவே, பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
|
நீதித்துறையின் உண்மை முகம்
இந்த தீர்ப்பின் மூலம் குற்றப்பழியை சுமந்து கொண்டிருந்தவர்கள் மீதான கலங்கம் துடைக்கப்பட்டு இருக்கிறது. நீதித்துறை தனது சிறப்பான பணியை ஆற்றி உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.
|
தேவையற்ற பழி சுமந்தோம்
இந்த 2ஜி வழக்கின் தேவையற்ற பழியை தி.மு.க இரண்டு தேர்தல்களில் சுமந்து உள்ளது. இதனால் எங்கள் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பொய் வழக்கில் இருந்து இப்போது நாங்கள் மீண்டு வந்துள்ளோம் என்று குறிப்பிட்டு உள்ளார் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
|
அன்னா ஹசாரே கருத்து
அரசிடம் ஊழல் நடந்ததற்கான வலுவான மற்றும் உண்மையான ஆதாரங்கள் இருந்தால், இந்த தீர்ப்பை எதிர்த்து நிச்சயம் மேல்முறையீடு செய்யலாம் என்று காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications