For Daily Alerts
Just In
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: நீதிமன்றத்தில் ஆ.ராசா சாட்சியம்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சாட்சியளித்தார்.
2ஜி வழக்கில் தன்னையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும் எனக் கோரி ராசா மனு அளித்திருந்தார். அவரது மனு ஏற்கப்பட்டதை அடுத்து, நீதிபதி ஓ. பி. சைனி முன்னிலையில், இன்று அவர் சாட்சியம் அளித்தார்.
சாட்சியாக அவர் தெரிவித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. நாளையும் ராசா சாட்சியளிக்க உள்ளார். கோடை விடுமுறையை அடுத்து சுமார் 45 நாட்களுக்குப் பிறகு 2ஜி சிறப்பு நீதிமன்றம் இன்று கூடியது குறிப்பிடத்தக்கது.
English summary
Former telecom minister A. Raja defends himself as a witness in the ongoing trial in the 2G spectrum scam case in CBI special court.
Story first published: Tuesday, July 1, 2014, 18:20 [IST]