பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ18,203 கோடியில் 14 மாநிலங்களில் 3,21,567 வீடுகள்
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 14 மாநிலங்களில் ரூ18,023 கோடியில் 3,21,567 வீடுகள் கட்டப்பட உள்ளன.
டெல்லி: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு 14 மாநிலங்களில் ரூ18,023 கோடியில் 3,21,567 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்காக மத்திய அரசு தம்முடைய பங்களிப்பாக ரூ4,753 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வீட்டுவசதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
ஹரியானா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத், மிசோரம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீகார், கேரளா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களின் 523 நகரங்களில் 3,21,567 வீடுகள் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்துக்கு மத்திய அரசு தமது பங்களிப்பாக ரூ4,752 கோடி வழங்குகிறது.

ஹரியானாவில் 55 நகரங்களில் ரூ7,261 கோடியில் 70,671 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்கு மத்திய அரசு ரூ1,060 கோடி நிதி தருகிறது. மேற்கு வங்கத்தில் 86 நகரங்களில் ரூ 2,431 கோடியில் 59,929 வீடுகள் கட்டப்படும். மத்திய அரசின் நிதி ரூ899 கோடி.
ராஜஸ்தானில் 48 நகரங்களில் ரூ2,519 கோடியில் 54,821 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்கான மத்திய அரசின் நிதி ரூ822 கோடி. உத்தரப்பிரதேசத்தில் 121 நகரங்களில் ரூ1,059 கோடியில் 39, 683 வீடுகள் கட்டப்படும். இதற்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ595 கோடி.
குஜராத்தில் 19 நகரங்களில் ரூ2,204 கோடியில் 35,851 வீடுகள் கட்டப்படும். மத்திய அரசின் நிதியாக ரூ467 கோடி வழங்கப்படும். மிசோரமில் 16 நகரங்களில் ரூ316 கோடியில் 15,798 வீடுகள் கட்டப்படும். இதற்கான மத்திய அரசின் உதவி ரூ237 கோடி.
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவில் 58 நகரங்களில் ரூ605 கோடியில் 11,941 வீடுகள் கட்டப்படும். இதற்கான மத்திய அரசின் பங்களிப்பு ரூ 179 கோடி. மகாராஷ்டிராவில் 15 நகரங்களில் ரூ863 கோடியில் 10,639 வீடுகள் கட்டப்படும். இதற்கான மத்திய அரசின் நிதி ரூ156 கோடி.
மத்திய பிரதேசத்தில் 11 நகரங்களில் 5,426 வீடுகள் ரூ289 கோடியில் கட்டப்படும். இதற்கு ரூ81 கோடி நிதி உதவி தருகிறது மத்திய அரசு. பீகாரில் ரூ388 கோடியில் 10 நகரங்களில் 8154 வீடுகள் கட்டப்படும். இதற்கான மத்திய அரசின் நிதி ரூ122 கோடி.
கேரளாவில் ரூ203 கோடியில் 32 நகரங்களில் 5,073 வீடுகள் கட்டப்படும். இதற்கான மத்திய அரசின் நிதி ரூ 76 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் 41 நகரங்களில் 3,345 வீடுகள் ரூ55 கோடியில் கட்டப்படும். இதற்கான மத்திய அரசின் உதவி ரூ50 கோடி.
பஞ்சாபில் ஒரு நகரத்தில் மட்டும் 176 வீடுகள் ரூ9 கோடியில் கட்டப்படும். இதற்கான மத்திய அரசின் நிதி ரூ2.7 கோடி. கோவாவில் 10 நகரங்களில் 60 வீடுகள் ரூ2.43 கோடியில் கட்டப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications