தேவையில்லாத "வேலை" பார்த்த 3 சீனப் பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!
டெல்லி: சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஸின்குவா நிறுவனத்தின் 3 பத்திரிகையாளர்கள், அவர்களுக்கு தொடர்பு இல்லாத வேலைகளில் ஈடுபட்டதால் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
அவர்கள் இந்தியாவில் தங்குவதற்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸின்குவா நிறுவனத்தின் டெல்லி செய்திப் பிரிவு தலைவர் வூ கியாங், மும்பை செய்தியாளர்கள் டாங் லூ, மா கியாங் ஆகியோர்தான் வெளியேற்றப்படும் பத்திரிகையாளர்கள் ஆவர்.

இவர்கள் தங்களது வேலையைத் தவிர பிற வேலைகளில் அதிக அளவில் ஈடுபடுவதாக உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து இவர்கள் பல மாதங்களாக கண்காணிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவர்களின் விசா முடிவடைந்தது. அதன் பிறகு அவர்களது விசா தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது 3 பேரையும் வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை 31ம் தேதி அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இவர்களுக்குப் பதில் வேறு பத்திரிகையாளர்களை சீன அரசு அனுப்பலாம் என்றும் இந்திய அரசு விளக்கியுள்ளது. மேலும், இந்த நடவடிக்கைக்கும், இந்தியாவை என்எஸ்ஜி அமைப்பில் இணைய விடாமல் சீன அரசு தடுத்து வருவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
-
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications