மே. வங்கம்: கல்லூரி மாணவி பலாத்கார கொலை வழக்கு- மூவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு!
கொல்கத்தா: கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் மேலும் 3 பேருக்கு ஆயுள் தண்டணை விதித்தும் கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ளது காம்துனி கிராமம் . இந்த கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை கடந்த 2013 ஜூன் 7ம் தேதியன்று ஒரு கும்பல் கடத்தி கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தது. பின்னர் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் இந்த சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் கோபால் நாஸ்கர் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். இதர 8 பேர் மீதான வழக்கு விசா ரணை கொல்கத்தா செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்றது. நீதிபதி சஞ்சிதா சர்க்கார் வியாழக்கிழமையன்று தீர்ப்பளித்தார்.
அதன்படி சைபுல் அலி, அன்சார் அலி, அமினூல் அலி, இமானு வேல் இஸ்லாம், அமினூல் இஸ்லாம், போலா நாஸ்கர் ஆகிய 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
ரபிகுல் இஸ்லாம், நூர் அலி ஆகியோருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
6 பேருக்கும் நேற்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தண்டனை விவரம் இன்று வெளியிடப்படும் என்று நீதிபதி சஞ்சிதா சர்க்கார் தெரிவித்தார். அதன்படி சைபுல் அலி, அன்சார் அலி, அமினூல் அலி ஆகியோர் மீதான பலாத்காரம், கொலை குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதால் அதிகபட்சமாக மரண தண்டனை விதித்து தீதிபதி தீர்ப்பளித்தார்.
இமானுவேல் இஸ்லாம், அமினூல் இஸ்லாம், போலா நாஸ்கர் ஆகிய மூவர் மீது பலாத்கார குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்ப தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications