ஜாகிர் நாயக்கின் என்ஜிஒ லைசன்சை புதுப்பித்தது யார்... 3 உள்துறை அதிகாரகள் சஸ்பெண்ட்
டெல்லி: மத போதகர் ஜாகீர் நாயக் நடத்தி வரும் என்ஜிஒவின் எப்சிஆர்ஏ என்று சொல்லப்படும் வெளிநாட்டில் இருந்து பணம் பெறுவதற்கான லைசன்ஸ் புதுபிக்கப்பட்டுள்ளது. ஜாகீர் நாயக் மீது தீவிர விசாரணை நடைபெற்று வரும் போது எப்படி என்ஜஒ லைசன்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்ததையொட்டி, உள்துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் வங்க தேசம் டாக்காவில் நடைபெற்ற தீவரவாதத் தாக்குதலில் 22 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒருவரும் பலியானார். இந்திய மத போதகர் ஜாகீர் நாயக்கின் சொற்பொழிவைக் கேட்டுத்தான் அவர் தீவிரவாதியாக மாறினார் என்று வங்கதேச அரசு கூறியது.
இதனையடுத்து, ஜாகீர் நாயக்கின் நடவடிக்கைகளுக்கு கடுமையான நெருக்கடிகள் உருவாகின. மேலும், மகாராஷ்டிர அரசும் மத்திய அரசும் ஜாகீர் நாயக் மற்றும் அவரது என்ஜிஓ நிறுவன நடவடிக்கைகளை தீவிரமாக காண்காணித்து வருகின்றன. மேலும் ஜாகீர் நாயக் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையின் முடிவில் தயாரிக்கப்பட்ட அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜாகீர் நாயக் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வரும் நிலையில், அவர் நடத்தி வரும் என்ஜிஓவின் எப்சிஆர்ஏ லைசன்ஸ் அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஜாகீர் நாயக்கின் நடவடிக்கைகள் தீவிர கண்காணிப்பலும், விசாரணையிலும் இருக்கும் இருக்கும் போது, எப்படி அவர் நடத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் என்ற என்ஜிஓ நிறுவனத்திற்கு லைசன்ஸ் புதுப்பிக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து, உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த இணை செயலாளர் ஜிகே திவேதி, மற்றும் இரு துணை செயலாளர்கள் என 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications