நாளை தேர்தல் நடைபெற உள்ள மதுபானியில் குண்டுவெடிப்பு: 3 பாஜக தொண்டர்கள் காயம்
மதுபானி: நாளை தேர்தல் நடைபெற உள்ள மதுபானி தொகுதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாஜக கட்சித் தொண்டர்கள் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
16வது லோக்சபா தேர்தலின் 7வது கட்டமாக நாளை பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று அம்மாநிலத்தில் மதுபானி பகுதியில் உள்ள காத்மா கோயிர் கிராமத்தில் மர்மநபர்களால் டிபன் பாக்ஸ் ஒன்றில் முற்றிலும் தயாரிக்கப்படாத குண்டு வைக்கப் பட்டிருந்தது.
எதிர்பாராத விதமாக அந்தக் குண்டு வெடித்ததில் பாஜக கட்சியைச் சேர்ந்த மூன்று தொண்டர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
மேற்கொண்டு குண்டு வெடிப்பு தொடர்பான முழு தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அங்கு குண்டு வெடித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications