லிங்காயத்துகளுக்கு விரைவில் தனிமத அங்கீகாரம்- பச்சை கொடி காட்ட போகும் சித்தராமையா
லிங்காயத்துகள் தனிமத அங்கீகார கோரிக்கை பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு தற்போது அறிக்கை சமர்பித்து இருக்கிறது.
பெங்களூர்: லிங்காயத்துகள் தனிமத கோரிக்கை பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு தற்போது அறிக்கை சமர்பித்து இருக்கிறது. கடந்த 6 மாதங்களாக இந்த குழு ஆய்வு செய்து வந்தது.
கர்நாடகாவில் இருக்கும் லிங்காயத்துகள், தங்களை இந்துக்கள் இல்லை தனி மதம் என்று அறிவிக்க கோரி இருந்தார்கள். தங்களை வீர சைவர்கள் என்று அறிவிக்க வேண்டும் கோரி இருந்தார்கள்.
இதற்காக இவர்கள் கடந்த வருடம் போராட்டம், பேரணி நடத்திக் கொண்டு இருந்தனர். கர்நாடகாவில் லிங்காயத்துகள் தேர்தல் முடிவுகளை மாற்றுவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.

ஏற்றார்கள்
பொதுவாக லிங்காயத்துகள் பாஜக கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், சித்தராமையா அவர்களை தன் வசம் இழுத்தார். லிங்காயத்துகளின் தனி மத கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கினார். ஆனால் பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு பலத்தை சேர்த்தது.

என்ன குழு
இந்த நிலையில் லிங்காயத்துகள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி என் எஸ் நாகமோகன் தாஸ், பேராசிரியர் ராமகிருஷ்ண மாராதே, ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் இருக்கும் கன்னட மொழி இருக்கையின் தலைவர் புருஷோத்தமன் பிலிமன் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டார்கள்.

சமர்ப்பித்தார்கள்
இவர்கள் கடந்த 6 மாதமாக லிங்காயத்துகள் குறித்து ஆராய்ச்சி நடத்தினார்கள். அதன்படி தற்போது இவர்கள் அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறார்கள். கடந்த 2ம் தேதி இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் அரசு ஒப்புதல் வழங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

தேர்தல் திட்டம்
ஏற்கனவே கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கியுள்ளது. தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவு அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது லிங்காயத்துகள் ஆதரவு அவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது அம்மாநில தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications