3 கட்டங்களில் வெறும் 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களின் 18 தொகுதிகளுக்காக மட்டுமே 3 கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத், நாடு முழுவதும் 9 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். 9 கட்ட வாக்குப் பதிவு விவரங்களையும் அவர் தெரிவித்தார்.
இதில் 3 கட்ட வாக்குப் பதிவு மொத்தமே 18 தொகுதிகளுக்கு மட்டுமே உரியது. இவை அனைத்துமே வடகிழக்கு மாநில லோக்சபா தொகுதிகளாகும்.

முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 7-ந் தேதியன்று 5 தொகுதிகள் மற்றும் திரிபுராவின் ஒரு தொகுதிக்கு நடைபெறுகிறது.
2வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 9-ந் தேதியன்று அருணாசலப் பிரதேசத்தின் 2, மணிப்பூரின் 1 மற்றும் மேகலாயாவின் 2, மிசோரம்-1, நாகலாந்தின் ஒரு தொகுதிக்கு நடைபெறுகிறது.
4வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 12-ந் தேதியன்று வெறும் 5 தொகுதிகளுக்கு மட்டுமே நடைபெறுகிறது. அசாமின் 3, சிக்கிமின் 1, திரிபுராவின் ஒரு தொகுதிக்கு மட்டுமே வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் மாலை 3 மணிக்கே கடுமையாக இருட்டிவிடும். இதனால் வடகிழக்கு மாநிலங்களின் காலநிலை, பாதுகாப்பு அம்சங்கள், போக்குவரத்து வசதிகளைக் கருத்தில் கொண்டு தேர்தல் இப்படி பல கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications