திருப்பதி சென்றபோது விபரீதம்... விபத்தில் சிக்கி ஓசூரைச் சேர்ந்த 3 பேர் பலி; 4 பேர் படுகாயம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க காரில் சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஓசூரை சேர்ந்த 3 பக்தர்கள் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் சூரி என்கிற சுரேஷ். இவரது நண்பர் நரேன். இருவரும், உறவினர்கள் 4 பேருடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று அதிகாலை காரில் புறப்பட்டனர். அவர்களது கார் திருப்பதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. காரை மெல்லி என்பவர் ஓட்டினார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேர் அருகே கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, திடீரென இவர்கள் சென்ற கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. கார் டிரைவர் மெல்லி மற்றும் சூரி, நரேன் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தனர். காரில் அவர்களுடன் சென்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயத்துடன் துடிதுடித்த அவர்கள் 4 பேரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பலமநேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதேபோல் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பலமநேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications