ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் அதிரடி தேடுதல் வேட்டை.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனந்த்நாக் மற்றும் அர்வானி பகுதியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளை அவர்கள் சுட்டுக்கொன்றனர்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் எல்லையையொட்டி கிராமங்களில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் ராணுவத்தினர் எல்லையையொட்டிய ஆனந்த்நாக் மற்றும் அர்வானி ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

3 terrorists killed by Army in Jammu & Kashmir!

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவத்தினரும் பதிலடி தாக்குதல் நடத்தியதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த வேறு யாரேனும் பதுங்கியிருக்கிறார்களா என்றும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+