ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் அதிரடி தேடுதல் வேட்டை.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனந்த்நாக் மற்றும் அர்வானி பகுதியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளை அவர்கள் சுட்டுக்கொன்றனர்.
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் எல்லையையொட்டி கிராமங்களில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் ராணுவத்தினர் எல்லையையொட்டிய ஆனந்த்நாக் மற்றும் அர்வானி ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவத்தினரும் பதிலடி தாக்குதல் நடத்தியதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த வேறு யாரேனும் பதுங்கியிருக்கிறார்களா என்றும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.