காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயற்சி... தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 4 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
ஸ்ரீநகர் : காஷ்மீரின் எல்லையில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகளை ரீணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர், இந்தச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.
குபுவாரா மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நவ்காம் செக்டாரில் இன்று தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர். பயங்கர ஆயுதங்களுடன் நுழைய முயன்ற தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிந்த இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதனையடுத்து இருதரப்பிடையே நேற்று இரவு கடுமையான சண்டை தொடங்கி உள்ளது. சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த சண்டையில் ராணுவ வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 15 நாட்களில் பாகிஸ்தான் உதவியுடன் 4 முறை இந்தியாவிற்குள் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சி செய்து உள்ளனர். இந்திய ராணுவம் அதனை முறியடித்து வருகிறது. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் எல்லையில் இருமுறை பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி சம்பவங்கள் நடந்து உள்ளது.
நவ்காம் செக்டாரில் இருந்து கடைசியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி ராணுவ ஆப்ரேஷன் தொடர்ந்து நடக்கிறது என்றே தெரிவித்து உள்ளது. இதில் இன்று காலையில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 26-ம் தேதி எல்லையில் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த உரி செக்டாரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் எல்லை நடவடிக்கை படையை சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு மறுநாள் அதே உரி செக்டாரில் ஊடுருவ முயன்ற 6 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிக்கும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications