மியான்மர் மலைகளில் 30,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் உணவின்றி பட்டினியால் பரிதவிப்பு.. அதிர்ச்சி தகவல்
மியான்மர் மலைகளில் 30,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் உணவும் மருந்தும் இல்லாமல் பட்டினியாலும் நோய்களாலும் பரிதவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேபிடா: மியான்மர் ராணுவத்தின் இனப்படுகொலையில் இருந்து தப்பி மலைகளில் தஞ்சமடைந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் 30,000 பேர் உணவின்றி பட்டினியால் தவிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்கதேசத்தை பூர்வீமாக கொண்டவர்கள் என குறிப்பிட்டு மியான்மர் பவுத்த பேரினவாதிகள் ஈவிரக்கமின்றி கொடூர இனப்படுகொலையை நிகழ்த்தி வருகின்றனர். மியான்மர் ராணுவ முகாம்களைத் தாக்கியதாக கூறி அந்நாட்டு ராணுவமும் கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி முதல் ரோஹிங்யா முஸ்லிம்களை நரவேட்டையாடி வருகிறது.

இதனால் மியான்மரை விட்டு 1 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் தப்பி வங்கதேசத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். மேலும் மியான்மரை விட்டு தப்பிய 30,000 பேர் வங்கதேசத்துக்கு அருகே உள்ள மலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்கள் உணவு கிடைக்காமல் பிஞ்சு குழந்தைகளுடன் பசியாலும் பட்டியானாலும் நோய்களாலும் பரிதவித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications