ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் படுகொலை.. சுஷ்மா சுவராஜ் பரபரப்பு
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 இந்தியர்களும் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 இந்தியர்களும் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றுதான் வந்தது என்று குறிப்பிட்டுள்ளார். கொல்லப்பட்ட 39 பேரின் உடலும் அடையாளம் காணப்பட்டு இருக்கிறது.
இவர்களின் உடல் விரைவில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. இந்த தகவல் நாடாளுமன்றத்தில் பெரிய புயலை கிளப்பி இருக்கிறது.

காணாமல் போனவர்கள்
கடந்த 2014ல் ஈராக்கில் 39 இந்தியர்கள் காணாமல் போனார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அவர்களை பிணை கைதியாக பிடித்து வைத்து இருந்தது. அப்போது அவர்கள் அனைவரும் ஈராக்கின் மொசூல் நகரில் அடைத்து வைக்கப்பட்டனர். அங்கு இருக்கு ஜெயிலில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

தாக்குதல்
அந்த பகுதியில் தீவிரவாதிகள் மோசமாக தாக்குதல் நடத்தினார்கள். இந்த நிலையில் அந்த ஜெயிலும் ஒரு மாதம் முன்பு தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் அங்கு இருந்த 39 இந்தியர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் இருந்து வந்தது.

சுஷ்மா மறுப்பு
இவர்களின் நிலை என்ன என்று பதிலளிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறுத்து வந்தார். இந்த நிலையில் 39 பேரும் இறந்துவிட்டதாக இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். அந்த ஜெயில் கட்டிடம் தகர்க்கப்பட்ட போதே இவர்கள் மரணம் அடைந்துவிட்டார்கள் என்றுள்ளார்.

பரிசோதனை
இவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ரத்த மாதிரிகளை வைத்து இவர்களது உடல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களின் உடலை மீட்க இந்தியாவில் இருந்து விமானம் அனுப்பப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications