ஓடிஷாவில் யூனிபார்ம் போடாமல் வந்த காவலர்கள்... முட்டி போட வைத்த கண்டிப்பு இன்ஸ்பெக்டர்
முறையாக சீருடை அணியாமல் வந்த ஊர்க்காவல் படை வீரர்களை பொதுஇடத்தில் வைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முட்டி போட வைத்துள்ளார்.
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில், சீருடை அணியாத ஊர்காவல் படை வீரர்களுக்கு முட்டி போடும் தண்டனை அளிக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம், மயூர்பான்ஜி மாவட்டம், பாரிபாடா பகுதியில் ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட வந்த 4 ஊர்க்காவல் படை வீரர்கள் முறையாக சீருடை அணியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஒரு பெண் உள்பட நான்கு ஊர்காவல் படை வீரர்களுக்கு முட்டி போடும் தண்டனை அளித்தார் காவல் ஆய்வாளர். இது தொடர்பான புகைப்படம் நேற்று வெளியானதும் ஒடிசா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பானது. நகரத்தின் முக்கிய பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில், இத்தகைய தண்டனை தருவது சரியா என்ற கேள்வியும் எழுந்தது.
ஊர்க்காவல் படையினர் மீதான நடவடிக்கை குறித்து விளக்கமளித்துள்ள காவல் ஆய்வாளர் சேத்தி, போலீசார் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்களுக்கு தண்டனை விதித்ததாகவும், தனிப்பட்ட முறைய்ல எந்த விரோதமும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள் கூடும் இடத்திற்கு காக்கி பேண்ட்டுடன் சாதாரண சட்டை அணிந்து வந்ததால் இனி இது போன்று செய்யக் கூடாது என்பதற்காகவே 3 நிமிடங்கள் மட்டும் முட்டி போட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
எனினும் ஊர்க்காவல் படை வீரர்களை பொதுஇடத்தில் முட்டி போடி வைத்த செய்தி புகைப்படம் மற்றும் வீடியோவாக சமூக வலைதளங்களில் தீயாக பரவியதால் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மயூர்பான்ஜி மாவட்ட எஸ்.பி.,யிடம் இது குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக ஊர்க்காவல்படை டிஜிபி கூறியுள்ளார். மேலும் விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications