4 வருட பாஜக ஆட்சியில் புதிய வளர்ச்சி அடைந்த விமான போக்குவரத்து!
கடந்த 4 வருட மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியாவின் விமான போக்குவரத்து துறை மிகவும் அதிக அளவில் வளர்ந்து இருக்கிறது.
Recommended Video

டெல்லி: கடந்த 4 வருட மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியாவின் விமான போக்குவரத்து துறை மிகவும் அதிக அளவில் வளர்ந்து இருக்கிறது.
தற்போது மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 4 வருட ஆட்சியை வெற்றிகரமாக முடித்துள்ளது. நான்கு வருடம் என்னென்ன நலத்திட்டங்கள் செய்யப்பட்டது என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 4 வருடத்தில் சிறு சிறு நகரங்களுக்கு கூட விமான போக்குவரத்தை ஏற்படுத்தியதன் மூலம் போக்குவரத்து பெரிய அளவில் வளர்ந்துள்ளது. அதேபோல் மக்கள் மிகவும் அதிக அளவில் விமானங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

எண்ணிக்கை
கடந்த நான்கு வருடத்தில் விமான போக்குவரத்தில் உலகிலேயே இந்தியா மூன்றாவது பெரிய நாடாக மாறியுள்ளது. கடந்த மூன்று வருடத்தில் விமான போக்குவரத்தின் அளவு இந்தியாவில் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இப்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இப்போதே ரயிலில் பயணிப்பவர்களை விட விமானத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.

மாற்றம்
போபால், இந்தூர் ராய்ப்பூர் ஆகிய உள்ளூர் விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக மாற்ற மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஆனாலும் விமான தேவை, விமான எண்ணிக்கை, பகுதியின் தரம், போக்குவரத்து பயணிகள் எண்ணிக்கை, 9000 அடி உள்ள ஓடுதளம், சிறப்பு வசதிகள் என பல காரணிகள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இந்த விமான நிலையங்கள் விரைவில் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும்.

பசுமை விமான நிலையம்
ஹைதராபாத், கொச்சி, டெல்லி போன்ற பெரிய விமான நிலையங்கள் மொத்தமாக பசுமை சார்ந்த விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்லிதான் முதல்முறையாக சோலார் மூலம் இயங்கும் விமான நிலையமாக மாறியது. அதன்பின் கொச்சியும் சோலார் மூலம் இயங்க ஆரம்பித்தது. தற்போது ஹைதராபாத் விமான நிலையமும் சோலார் மூலம் இயங்க தொடங்கியுள்ளது. விரைவில் மற்ற விமான நிலையங்களும் இப்படி மாற்றப்படும்.

புதிய விதிமுறை
மத்திய அரசு இந்த வருடம்தான் இந்தியாவின் முதல் தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையை அறிமுகப்படுத்தியது. இது இந்திய விமானங்கள் எளிதாக வெளிநாடு செல்ல வகை செய்தது. ஐரோப்பா, தெற்காசிய நாடுகளை இது எளிதாக இணைக்க வகை செய்தது.
-
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications