Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 வருட பாஜக ஆட்சியில் புதிய வளர்ச்சி அடைந்த விமான போக்குவரத்து!

கடந்த 4 வருட மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியாவின் விமான போக்குவரத்து துறை மிகவும் அதிக அளவில் வளர்ந்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மோடியின் 4 ஆண்டுகள் ஆட்சி எப்படி இருந்தது-மக்கள் கருத்து- வீடியோ

    டெல்லி: கடந்த 4 வருட மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியாவின் விமான போக்குவரத்து துறை மிகவும் அதிக அளவில் வளர்ந்து இருக்கிறது.

    தற்போது மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 4 வருட ஆட்சியை வெற்றிகரமாக முடித்துள்ளது. நான்கு வருடம் என்னென்ன நலத்திட்டங்கள் செய்யப்பட்டது என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    கடந்த 4 வருடத்தில் சிறு சிறு நகரங்களுக்கு கூட விமான போக்குவரத்தை ஏற்படுத்தியதன் மூலம் போக்குவரத்து பெரிய அளவில் வளர்ந்துள்ளது. அதேபோல் மக்கள் மிகவும் அதிக அளவில் விமானங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

     எண்ணிக்கை

    எண்ணிக்கை

    கடந்த நான்கு வருடத்தில் விமான போக்குவரத்தில் உலகிலேயே இந்தியா மூன்றாவது பெரிய நாடாக மாறியுள்ளது. கடந்த மூன்று வருடத்தில் விமான போக்குவரத்தின் அளவு இந்தியாவில் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இப்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இப்போதே ரயிலில் பயணிப்பவர்களை விட விமானத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.

     மாற்றம்

    மாற்றம்

    போபால், இந்தூர் ராய்ப்பூர் ஆகிய உள்ளூர் விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக மாற்ற மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஆனாலும் விமான தேவை, விமான எண்ணிக்கை, பகுதியின் தரம், போக்குவரத்து பயணிகள் எண்ணிக்கை, 9000 அடி உள்ள ஓடுதளம், சிறப்பு வசதிகள் என பல காரணிகள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இந்த விமான நிலையங்கள் விரைவில் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும்.

     பசுமை விமான நிலையம்

    பசுமை விமான நிலையம்

    ஹைதராபாத், கொச்சி, டெல்லி போன்ற பெரிய விமான நிலையங்கள் மொத்தமாக பசுமை சார்ந்த விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்லிதான் முதல்முறையாக சோலார் மூலம் இயங்கும் விமான நிலையமாக மாறியது. அதன்பின் கொச்சியும் சோலார் மூலம் இயங்க ஆரம்பித்தது. தற்போது ஹைதராபாத் விமான நிலையமும் சோலார் மூலம் இயங்க தொடங்கியுள்ளது. விரைவில் மற்ற விமான நிலையங்களும் இப்படி மாற்றப்படும்.

     புதிய விதிமுறை

    புதிய விதிமுறை

    மத்திய அரசு இந்த வருடம்தான் இந்தியாவின் முதல் தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையை அறிமுகப்படுத்தியது. இது இந்திய விமானங்கள் எளிதாக வெளிநாடு செல்ல வகை செய்தது. ஐரோப்பா, தெற்காசிய நாடுகளை இது எளிதாக இணைக்க வகை செய்தது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+