Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

41 வயது பெண் ஐடி ஊழியர் கேரளாவில் பலாத்காரம்.. மசாஜுக்குப் போன இடத்தில் கொடுமை

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கேரள மாநிலம் பூவாறு பகுதிக்கு சுற்றுலா மற்றும் மசாஜுக்காக போன இடத்தில் பெங்களூரைச் சேர்ந்த 41 வயதான தகவல் தொழில்நுட்ப ஊழியையை, விடுதி ஊழியர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்துள்ளது இந்த பூவாறு. இயற்கை சூழ்ந்த பகுதியாகும் இது. சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இங்கு ஆயுர்வதே மசாஜ் பிரபலமானதாகும். இதற்காகவே பலர் இங்கு வருகின்றனர். மேலும் படகு சவாரியும் இங்கு உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர்கள் உள்பட மொத்தம் 28 பேர் இங்கு சுற்றுலா மற்றும் மசாஜுக்காக வந்தனர். அறை எடுத்துத் தங்கினர்.

அதில் 41 வயதான பெண் ஊழியர் தனி அறையில் தங்கியிருந்தபோது இரவில் அங்கு புகுந்த 2 பேர் அவரை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர்.

இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார் அப்பெண். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சம்பந்தப்பட்ட விடுதியைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் மீது சந்தேகம் எழவே அவர்களை பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+